தெற்கு அதிவேக வீதியை முழுமையாக கண்காணிக்க திட்டம்!

213 0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்கும் வகையில் நெடுஞ்சாலையை முழுமையாக உள்ளடக்கிய வகையில் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது. 

தற்பொழுது இந்த நெடுஞ்சாலை கட்டமைப்பு வெளியேறும் மற்றும் உட்பிரவேசிக்கும் மத்திய நிலையங்களில் மாத்திரம் இந்த சிசிடிவி கமராக்கள் பொறுத்தப்பட்டிருப்பதாக நெடுஞ்சாலையின் பராமரிப்பு மற்றும் நேர பிரிவின் பணிப்பாளர் சமன் ஒப்பநாயக்க தெரிவித்தார்.

நெடுஞ்சாலை கண்காணிப்பு நடவடிக்கையை பயனுள்ள வகையில் முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment