அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சேலம் கண்ணன் மரணம்

295 0

201609171105531154_salem-aiadmk-former-mp-kannan-death_secvpfசேலம் திருவாக்கவுண்டனூர் பழனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் பி.கண்ணன் (வயது 78), வக்கீல். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கும் போது கண்ணன் முக்கிய பங்காற்றினார். மேலும் அவர் சேலம் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். இதுதவிர 1977-ம் ஆண்டு சேலம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராகவும், 1984-ம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் (16) காலை கண்ணனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கண்ணனின் உடல் சேலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவருடைய இறுதிச்சடங்கு நிகழ்ச்சி  (சனிக்கிழமை) சேலத்தில் நடைபெறுகிறது. இறந்த கண்ணனுக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், சுதா, பிரியா என்ற 2 மகள்களும் உள்ளனர்.