மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் மாமா கைது

220 0

இளவயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் சிறுமியின் மாமா மாத்தளை, வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய தேங்காய் விற்பனையில் ஈடுபடும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

09 வயதுடைய சிறுமியே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அவர் வைத்திய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் தங்கியிருந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பெற்றோர் வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment