இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

220 0

கலவத்த – புலத்சிங்கள வீதியின் கலவெல்ல பகுதியில் இடம்பெறற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையில் சென்ற நபர் ஒருவரை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரியை ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மஹகம, தியகடுவ பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஹங்குரங்கெத, ரிகில்லஸ்கட வீதியின் கடுகஸ்ஹின்ன பகுதியில் கெப் வாகனம் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலத்த காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹங்குரங்கெத பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a comment