யால சரணாலயத்தின் ஒரு பகுதிக்கு 2 மாதங்கள் பூட்டு

193 0

யால தேசிய சரணாலயத்தின் ஒரு பகுதி இரு மாத காலத்துக்கு மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான இரு மாத காலங்களுக்கு, யால தேசிய சரணாலயத்தின் வலய இக்கம் 01 மூடப்படவுள்ளதோடு, ஏனைய பகுதிகள், சுற்றுலா பயணிகளுக்காக திறந்திருக்கும்.

சரணாலயத்தில் காணப்படும் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே, சரணாலயத்தின் குறித்த வலயம் மூடப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment