தொழிற்சங்க பயங்கரவாதத்தை தோற்கடிக்க காலம் வந்துள்ளது- சாகல

236 0

தொழிற்சங்க பயங்கரவாதத்தை தோற்கடிக்க காலம் வந்துள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.

முழு நாடும் சேர்ந்து நாட்டை 30 வருடங்களாக அழிவுக்கு இட்டுச்சென்ற பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்தது போன்று தொழிற்சங்க பயங்கரவாதத்தை கருத்து ரீதியாக தோற்கடிப்பதற்கான காலம் வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கங்களின் கடமையானது தார்மீக மற்றும் நெறிமுறைக்குட்பட்ட கட்டமைப்புக்குள் செயற்படுவதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலைநிறுத்தத்தை மேற்கொள்வது தொழிற்சங்கங்களின் இறுதி முடிவாக அமைய வேண்டுமே தவிர அதனை முதல் ஆயுதமாக பயன்படுத்த கூடாது எனவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment