உத­ய­சூ­ரி­யனின் மறைவு பேரி­ழப்பு – சம்பந்தன்

321 0

உலக தமி­ழர்­களின் உதயசூரி­ய­னாக இருந்து ஒளியூட்­டிய கலை­ஞரின் மறைவு ஈடு­செய்ய முடி­யாத பேரி­ழப்­பாகும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அனு­தாபம் தெரி­வித்­துள்ளார்.

கலைஞர் கரு­ணா­நி­தியின் மறை­வுக்கு அனு­தாபம் தெரி­வித்து அவர் விடுத்­துள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முது பெரும் தமி­ழ­றிஞர், உலகத் தமி­ழர்­களின் உன்­னத தலைவர், தமிழ் நாட்டின் முன்னாள் முத­ல­மைச்சர் கலைஞர் முத்­துவேல் கரு­ணா­நிதி அவர்கள் கால­மானார் என்ற செய்­தியை அறிந்து, பாரிய இழப்பு ஒன்று ஏற்­பட்ட துய­ரத்தை என் மனதில் உணர்ந்தேன். கடுஞ்­சு­க­யீனம் கார­ண­மாகக் காவேரி மருத்­துவ மனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்த கடந்த சில நாட்­க­ளாக அவர் பற்­றிய கரி­ச­ன­யோடு நான் இருந்த அதே­வேளை அவர் சுகம் அடைந்து உலகத் தமி­ழர்­க­ளுக்குத் தலை­வ­னாகத் தொடர வேண்­டு­மென்ற பிரார்த்­த­னையே என் மனதில் இருந்­தது. ஆயினும் காலம் அவர் உயிரைக் கவர்ந்து சென்று விட்­டது. அவர் இயற்­கை­யெய்­தி­விட்டார்.

கடந்த ஆறு தசாப்­தங்­க­ளாகத் தமிழ்­நாடு திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தின் தலை­வ­ராக இருந்து அர­சியல் பணி­யாற்­றிய அவர் ஐந்து தட­வைகள் தமிழ் நாட்டின் முத­ல­மைச்­ச­ரா­கவும், தொடர்ச்­சி­யாக 13 தட­வைகள் தமிழ் நாட்டுச் சட்­ட­மன்றத் தேர்­தல்­களில் போட்­டி­யிட்டு மக்­களின் அமோக ஆத­ர­வுடன் வெற்­றி­யீட்­டி­ய­வ­ரா­கவும் பேர­றிஞர் அண்ணா அவர்கள் காட்­டிய வழியில் கழ­கத்தின் அர­சியல் பணியை ஆற்­றி­ய­தோடு மட்­டு­மல்ல, செம்­மொ­ழி­யா­கிய தமிழின் வளர்ச்­சிக்கும், உயர்­வுக்கும் சிறப்­பான பணி­களைச் செய்­த­வ­ரா­கவும், சிறந்த தமி­ழ­றிஞர், இலக்­கிய அறிஞர், கதா­சா­ரியர், நாட­கா­சி­ரயர், எழுத்­தாளர், சிறந்த பேச்­சாளர், உயர்­வான தலைமைப் பண்­புகள் கொண்­டவர், அர­சியல் ஞானி போன்ற பன்­முக ஆளுமை கொண்­ட­வ­ராக அவர் திகழ்ந்தார். இந்­திய உப கண்­டத்தின் அர­சி­ய­லிலும் மிகவும் செல்­வாக்­கு­மிக்க தலை­வ­ரா­கவும் அவர் மதிக்­கப்­பட்டார். இத்­த­கைய உன்­னத தலை­வரின் சாத­னை­களை இச்­சி­றிய அனு­தாபச் செய்­தியுள் அடக்­கி­விட முடி­யாது.

கலைஞர் கரு­ணா­நிதி அவர்­க­ளுக்கும் எனக்கும் மிக நீண்ட கால­மாக நெருங்­கிய தொடர்­பு­களும் உற­வு­களும் இருந்து வந்­தன. நான் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்­திலும், அதன் பின்பும் அவர் எனக்குப் பல்­வேறு வழி­களில் ஒத்­து­ழைப்பும் ஆலோ­ச­னை­களும் வழங்­கி­ய­தோடு அவர் இறக்கும் வரை எமது அன்­பான தொடர்­பு­களும் உரை­யா­டல்­களும் தொடர்ந்­தன. தமிழ் தலைவர் தந்தை செல்­வ­நா­யகம், தலைவர் அமிர்­த­லிங்கம் உட்­பட பல இலங்கைத் தமிழ் தலை­வர்கள் தமிழ்­நாட்டில் சீவித்த காலத்­திலும் அதற்கு முன்பும் பின்பும் அவரின் அன்பும், எமக்­கான ஒத்­து­ழைப்பும் அதி­க­மாக இருந்­த­தோடு, அர­சியல் ரீதி­யிலும் எமக்கு பல்­வேறு வகையில் உத­வி­யாக இருந்தார். அவரின் பிரிவு என் மனதில் ஆழ்ந்த கவ­லையைத் தரு­வ­தாக உணர்­கின்றேன்.

இலங்கைத் தமி­ழர்­களின் பிரச்­சி­னை­க­ளிலும் அவர் மிகுந்த ஈடு­பாடு காட்­டினார். கல­வர காலங்­களில் தமிழ் மக்கள் அடைந்த துய­ரங்கள், வேத­னை­களில் தனது கரி­ச­னையை காண்­பித்து இந்­திய அரசின் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் செயற்­பட்டார்.

அவரின் பிரிவால் இலங்கைத் தமிழ் மக்­களும் ஆழ்ந்த துயரம் அடைந்­துள்­ளனர் என்­பதை தெரி­விப்­ப­தோடு அம்­மக்கள் சார்­பிலும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு சார்­பிலும், எனது சார்­பிலும் எனது ஆழ்ந்த கவ­லை­க­ளையும் அனு­தா­பங்­க­ளையும் மறைந்த தலைவரின் குடும்ப உறவினர்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் தெரிவிப்பதோடு உலகத் தமிழர்களின் உதய சூரியனாக இருந்து ஒளியூட்டிய அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Leave a comment