சம்பா அரிசி, கோழியிறைச்சி, முட்டை ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை

315 0

சந்தையில் சம்பா அரிசியின் விலை தொடர்ச்சியாக அதிகரிப்பதால் எதிர்வரும் நாட்களில் சம்பா அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்று இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கோழியிறைச்சி மற்றும் முட்டை விலை எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி அதிகரித்துச் செல்வதால் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கோழியிறைச்சி மற்றும் முட்டை விலை குறைவடையாவிட்டால் அவற்றுக்கும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வாழ்க்கைச் செலவு தீர்மானித்துள்ளது.

Leave a comment