மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஆசிரியர்கள் மீண்டும் விளக்கமறியலில்

181 0

மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த உயர்தர மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அந்த காணொளிகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டுக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடசாலை ஆசிரியர் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று (07) மொனராகலை பிரதான நீதவான் சமீர பிரசாத் தொடங்கொட முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு பிணை வழங்க வேண்டாம என தெரிவித்து நீதிமன்றத்திற்கு முன்னால் பிரதேசவாசிகள் அமைதிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வந்தனர்.

குறித்த ஆசிரியர்கள் இருவரும் இன்னும் பல மாணவிகளை வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மொனராகலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment