இவ்வாரத்துக்குள் எதிர்க் கட்சித் தலைவர் அறிவிக்கப்படுவார்- சபாநாயகர்

189 0

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமைப் பதவி தொடர்பில் தனது தீர்மானத்தை இவ்வாரத்துக்குள் அறியத்தருவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று(07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைமைப் பதவி தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சூடான விவாதத்தின் போது சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

எதிர்க் கட்சியில் தம்முடன் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் இதனால், தமக்கே எதிர்க் கட்சித் தலைமைப் பதவி கிடைக்க வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தனது உரையில் கூறினார். இதற்குப் பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனைக் கூறினார்.

Leave a comment