போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

227 0

வாழைத்தோட்டம், செக்குவத்த பகுதியில் ஒரு தொகை போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த நபரிடம் இருந்து ´யாபா´ எனும் 175 போதை மாத்திரைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment