இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலி

225 0

யடதொல, அளுத்கம வீதியின் மெனிக்கொட பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) இரவு கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த மூவரை வேன் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த நபர்களை வேத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருளுபெந்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment