கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடு சென்றவர்களுக்கு விளக்கமறியல்

218 0

சிலாபம் கடல் மார்க்கமாக பட­கு­களில் சட்­ட­வி­ரோ­த­மாக வெளிநாட்­டுக்குச் செல்ல முயற்­சித்த போது கைதுசெய்யப்பட்ட 21 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சிலா­பத்­தி­லி­ருந்து 117 கடல் மைல் தூரத்தில் வைத்து இவர்களை கைதுசெய்த கடற்படையினர் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பில் கடற்­படை விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் மேற்­கொள்­ளப்­படும் சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­களை தடுக்கும் நோக்­கத்தில் இலங்கை கடற்­ப­டையின் மேற்கு பிரிவில் பாது­காப்பு கட­மையில் இருந்­த­வர்­களால் கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை சந்­தே­கத்தின் பேரில் இலங்­கை­யர்கள் 21 பேர் கைது­செய்­யப்­பட்­டனர்.

கடற்­ப­டை­யினர் இலங்­கைக்கு உரித்­தான பொரு­ளா­தார வல­யத்­துக்குள் பாது­காப்பு கட­மையில் இருந்த வேளை, சந்­தே­க­மான முறையில் தெற்கு கடற்­ப­கு­தியில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த டோலர் படகு மற்றும் 21பேரை கடற்­படையின் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­துள்­ளனர்.

சிலா­பத்திலிருந்து சுமார் 117 கடல் மைல் தூரத்தில் சந்­தே­கத்­துக்­கு­ரிய வகையில் டோலர் பட­கொன்று பய­ணிப்­ப­தை கடற்­ப­டை­யினர் கண்­கா­ணித்­துள்­ளனர். இதன்­போது குறித்த படகு பய­ணிக்கும் திசைக்கு கடற்­ப­டையின் எதிர்த்தாக்­குதல் நடத்­தக்­கூ­டிய 2 பட­குகள் அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் பிரகாரம் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக குடியேறுவதற்கு முயற்சித்தபோதே 21இவரகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 19 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட இவர்களை இன்று சிலாபம் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Leave a comment