பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

211 0

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும், பிரதேச வினாத்தாள் சேகரிப்பு நிலையங்களுக்கும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு பரீட்சை நிலையத்தைச் சார்ந்ததாகவும் பொலிஸ் ரோந்து சேவைகளும் இடம்பெறுகின்றன. அவ்வாறே வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களுடனும் தலா இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

Leave a comment