நாட்டில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளும் யோசனைக்கு தான் முற்றாக எதிர்ப்புத் தெரிவிப்பதாக பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.
நாடு செலுத்த வேண்டிய கடன் சுமைகளுக்காக மக்கள் மீது வரிச் சுமைகள் அதிகரித்துள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு தற்போதைய சூழ்நிலையில் அவசியமற்ற ஒன்று எனவும் பிரதி அமைச்சர் நேற்று (03) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.
இதேவேளை, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரேரணை நிதி அமைச்சரின் ஊடாகவே பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இருப்பினும், நிதி அமைச்சர் இதற்கு எதிராக இருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.