சம்பள அதிகரிப்புக்கு 225 பேரும் உள்ளார்ந்த விருப்பம், வெளியில் நாடகம்- குமார வெல்கம

193 0

பாராளுமன்ற ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் சம்பள அதிகரிப்புக்கு பாராளுமன்றத்திலுள்ள அனைவரும் மனதளவில் உண்மையிலேயே விருப்பமுடன் காணப்படுவதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறித்து அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே இதனைக் கூறினார்.

ஆளும் கட்சியிலும், எதிர்க் கட்சியிலும் உள்ளவர்கள் பகட்டுத்தனமாக உள்ளொன்று வைத்துக் கொண்டு வெளியில் சம்பள அதிகரிப்பை விரும்பாதவர்கள் போன்று ஊடகங்களின் முன்னால் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment