ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் இந்தியாவுக்கு இடமெடுத்துக் கொடுப்போம்- ரணில்

200 0

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு தனித்துவமான இடமொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான சாதகமான ஒரு சூழல் உருவாகும் வரை காத்திருக்கிறோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விஜயமொன்றின் பேரில் இந்தியா சென்றுள்ள பிரதமர் திருப்பதியில் வைத்து இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடத்தை வழங்குவதற்கு பொருத்தமான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருக்கிறோம். தற்பொழுது இதுகுறித்து உறுதியாக எந்தப் பதிலும் கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment