அரசாங்கத்திடம் வரி அறவிடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை-மஹிந்த

199 0

அரசாங்கத்திற்கு வரி அறவிடுவதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கடவத்தை மேல் பியன்வல ஶ்ரீ சோமவர்தன விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தால் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அதேவேளை அரசாங்கத்தால் மக்களை நிர்வாகிக்க முடிந்தாலும் மகா சங்கத்தினரை நிர்வாகிக் முடியாது போயுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Leave a comment