மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

223 0

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் பண்டாரவத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (01) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் சிலாபம், மல்வத்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய அகில ஷிராந்த எனும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சிலாபம் பகுதியில் உள்ள இசைக்குழு ஒன்றின் பாடகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள், வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது முன்னால் வந்த லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை சிலாபம் வைத்தியவாலையில் அனுமதிக்கப்பட்ட போதே அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment