130 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

247 0

மன்னார் பிரதேசத்தில் 130 கிலோ கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார் ஒன்றில் அவை எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் 6.50 மில்லியன் ரூப என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment