அரச வங்கியில் கொள்ளையிட்டவர் கைது

222 0

அரச வங்கி ஒன்றில் பணக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒருவர் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ, காலி வீதி பிரதேசத்தில் இருக்கின்ற அரச வங்கி ஒன்றில் புகுந்த சந்தேகநபர் 1000 ரூபா நாணயத்தாளை கொடுத்து அதனை மாற்றித் தருமாறு வங்கி அதிகாரி ஒருவரிடம் கூறியுள்ளார்.

பின்னர் அந்த கரும பீடத்தின் மேலால் வங்கி அதிகாரி இருந்த இடத்திற்கு சென்று 15,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் சந்தேகநபர் வருகை தந்திருந்த மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரலஸ்கமுவ, சமரபால மாவத்தையில் வசிக்கும் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Leave a comment