முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் இன்று (23) மாலை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளனம் இன்று மாலை கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வுக்கு வருகை தந்தபோதே இவர்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் ஆகியோர் நீண்ட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

