ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை

232 0

ரயில் தொழில்நுட்ப சேவை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோர் நாளை (22) நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை செய்ய தீர்மானித்துள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு இதுவரை செவிசாய்க்காததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழில்நுட்ப உதவி அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் டபிள்யு. டீ.எஸ்.கமல்  பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே திணைக்களத்தின் அரசுடைமையை தனியாருக்கும் வழங்குவதற்கும் அதற்காக சபையொன்றை நியமிப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த சட்டப் படி வேலையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment