காணாமல் போனதாக கூறப்பட்ட ஹம்பாந்தொட்டை – பந்தகிரிய இளைஞன் ஜீ.ஜீ கயஷான் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
திக்வெல்ல – தீகாவாலுகாராம விகாரையின் விகாராதிபதி ஊடாக, காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துவரப்பட்டதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
20 வயதான குறித்த இளைஞர் கடந்த 5ஆம் திகதி காணாமல் போனார்.
தனியார் நெற்தொகுதி ஒன்றில் களவாடியமை தொடர்பில் அவர் உள்ளிட்ட 3 பேர் ஹம்பாந்தொட்டை – பந்தகிரிய – யஹன்கல பகுதியில் வைத்து கடந்த தினத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
அதன்பின்னர் கயஷான் என்ற இளைஞர் தப்பிச் சென்றதாக கூறப்பட்ட போதும், குறித்த காவற்துறை நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டமைக்கான பதிவுகள் இல்லை.
எனினும் கயாசான் தம்முடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை, இந்த குற்றச்சாட்டில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட மற்றுமொரு இளைஞர் உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில், ஹம்பாந்தொட்டை காவற்துறையினரின் கான்ஸ்டபில்கள் நான்கு பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையிலேயே, காணாமல் போனதாக கருத்தப்பட்ட குறித்த இளைஞர் இன்று பிற்பகல் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.