தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த ஒப்பந்தங்களும் செய்துக்கொள்ளப்பட வில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் வழங்கிய அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளுக்கு எப்போதும் வரவேற்பு வெளியிட்டே வந்துள்ளார் எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.