தாஜூதின் கொலை – சட்டவைத்தியரின் கோரிக்கை நிராகரிப்பு

308 0

wasim-thajudeenறகர் வீரர் வசிம் தாஜூதின் கொலை தொடர்பில் முதலாவதாக பிரேத பிரிசோதனை மேற்கொண்ட கொழும்பு முன்னாள் பிரதான சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இந்த முன்பிணை கோரியக்கையை நிராகரித்தார்.

தம்மை கைது செய்ய தயார் நிலை மேற்கொள்ளப்படுவதாகவும் அதனை தவிர்க்கும் வகையில் முன் பிணை வழக்குமாறு முன்னாள் பிரதான சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர நீதிமன்றில் கோரியிருந்தார்.

எனினும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அந்த பிணை கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு பிணை வழங்கப்படுவதன்  ஊடாக சாட்சி அச்சுறுத்தப்படலாம் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றில் சுட்டிக்காட்டியது.

இதனை ஆராயந்த மேலதிக நீதவான், அந்த பிணை கோரிக்கையை நிராகரித்தார்.