எமது கட்சியின் ஒரே தெரிவு மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே-குமார வெல்கம

223 0
நாட்டின் ஆட்சிக்கு எமது கட்சியின் சார்ப்பில் ஒரே தெரிவு மஹிந்த ராஜபக்ஷ மட்டும் தான் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று (10) மாலை 6 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றால் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment