இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கும் சம்பள சூத்திரம் வேண்டும்-டில்வின் சில்வா

200 0

எரிபொருள் சம்பந்தமாக காணப்படுகின்ற விலைச் சூத்திரத்தை நாட்டுக்கு வௌிப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா இதனைக் கூறியுள்ளார்.

அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவை தாங்கிக் கொள்ள முடியாதுள்ள பொது மக்களுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பை தாங்கிக் கொள்ளமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் விலைச் சூத்திரத்தின் ஊடாக எரிபொருள் விலையை அதிகரிப்பதாக இருந்தால் மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான விலைச் சூத்திரத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதால் அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளமும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கும் சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a comment