உல்லாசப்பயணிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம்

210 0

மாத்தளை – செம்புவத்த பிரதேசத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை கண்டி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சந்தேகநபரிடமிருந்து கஞ்சா போதைப்பொருள் 10 கிராம் மற்றும் ஐஸ் எனும் போதைப்பொருள் 120 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்து நபர் ராகம பிரதேசத்தை சேர்ந்த நபர் என்றும் நீண்டகாலமாக முச்சக்கர வண்டிச் சாரதி போன்று வேடமிட்டு இப்பிரதேத்திற்கு அடிக்கடி வருகை தந்து இரகசியமான முறையில் இப்போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளைமையும் பொலிஸ் மேலதிக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இவ்வாறாக வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அவ்வாறு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல்களை வழங்கும்படி பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Leave a comment