பொலிஸாருக்கு கிடைக்கும் எந்தவொரு முறைப்பாடுகளையும் சிறியதாக கருதி விட முடியாது!

228 0

பொலிஸாருக்கு கிடைக்கும் எந்தவொரு முறைப்பாடுகளையும் சிறியதாக கருதி விட முடியாது என்று பெலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்நதர கூறியுள்ளார். 

யட்டியாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் சிறு முறைப்பாட்டுப் பிரிவு இல்லை என்றும், பொலிஸாருக்கு கிடைக்கின்ற முறைப்பாடுகளை சிறியதாக கருத முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நபர் ஒருவர் முறைப்பாடு செய்ய வந்தால் அந்த முறைப்பாட்டில் துக்கம் இருப்பதால் அதுபோன்ற முறைப்பாடுகளை சிறிய விடயமாக கருதிவிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a comment