தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தபால் துறை அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் கூறினார்.
ரோஹண அபேரத்ன 10 ஆண்டுகள் தபால் மா அதிபராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தபால் மா அதிபரின் இடமாற்றத்தால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பிருப்பதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார கூறினார்.

