ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடும் வாய்ப்பு கூட இப்போது பிள்ளைகளுக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கால்டன் வீட்டில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் காரர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றவில்லை என்றால் பயனற்ற ஒரு சமூகம் உருவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு ஒன்றையும் விற்பனை செய்வது இலகுவான விடயம் ஆனால் அவற்றை கட்டியெழுப்புவதே கஷ்டமான விடயம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

