3 வயது குழந்தையுடன் தற்கொலை முயற்சித்த பெண் கைது!

220 0

மூன்று வயதுடைய தமது ஆண் குழந்தையை கொலை செய்ய முயன்றதோடு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் (24) மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வடக்கு தொடுவாவ பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைக்குழந்தையுடன் கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை பிரதேசவாசிகள் கண்டுள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றியுள்ளனர். குழந்தை சிகிச்சைகளுக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே இந்த தற்கொலை முயற்சிக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்த மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment