தந்திரமான முறையில் திருடிய குழுவினர் கைது

244 0

வீட்டுற்குள் ஆட்கள் இருக்கும் போதே மிகவும் தந்திரமான முறையில் மடிக்கணினி மற்றும் தங்க நகைகளை திருடிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பதுளை, கல்கந்த பகுதியை சேர்ந்த 17, 21 மற்றும் 24 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்ந்து இவ்வாறு திருடி வருவதாகவும் அவ்வாறு திருடும் பொருட்களை விற்று பெறும் பணத்தை ஹெரோயின் வாங்குவதற்கு பயன்படுத்துவதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களால் திருடப்பட்ட மடிக்கணினிகள் மூன்றும், தங்க மோதிரங்கள் மூன்றும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment