16 பேர் கொண்ட குழு பாரிய பிரச்சினைக்குள்- சரத் அமுனுகம

241 0

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அந்தக் குழு கூட்டு எதிர்க் கட்சியில் இணைந்துகொள்வதாயின், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சகல பொறுப்புக்களையும் விட வேண்டும் என கூட்டு எதிரணி நிபந்தனையிட்டுள்ளது. இதனால், அக்குழு கடினமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment