கிளிநொச்சியில் உமையாள்புரத்தில் சடலம் மீட்பு (காணொளி)

425 0

paranthan-bodyகிளிநொச்சி  பரந்தன் உமையாள்புரம் இரசாயனத் தொழிற்சாலைக்கு பின்புறமாக சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
பரந்தன் உமையாள்புரம் இரசாயனத் தொழிற்சாலைக்கு பின்புறமாக மாடு கட்ட சென்ற பெண் ஒருவர், குறித்த சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் கிராம சேவையாளரிற்கு தகவல் வழங்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை பொலிசாரிற்கு கிராம சேவையாளர் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பற்றைக்குள் குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாகவும், இன்று நண்பகல் வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வரும் நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.