6700 கிலோ சந்தனத்துடன் இருவர் கைது

228 0

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக தயார் படுத்தப்பட்டிருந்த வௌ்ளை சந்தனக்கட்டைகளுடன் இருவரை பன்னல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பன்னல, எலபடகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகளே இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து 6700 கிலோ கிராம் எடையுடைய 175 பொதிகளில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பன்னல பகுதியை சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment