ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மிக விரைவில் இன்னும் சிலர் வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்வீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தனக்கு இதுவரையில் தெரிவு செய்யப்பட்டதற்கான அறித்தல் வரவும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.