கொக்குவிலில் வாள்வெட்டு!! – துரத்தி மடக்கிப் பிடித்த பிரதேச இளைஞர்கள்!

847 0

கொக்குவிலில் வாள்வெட்டில் ஈடுபட்ட குழு ஒன்று அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் சற்று முன்னர் நடந்துள்ளது. 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த குழு ஒன்றே வாள்வெட்டை நடத்தியுள்ளது.

வாள்வெட்டை நடத்திய குழுவைப் பிரதேச இளைஞர்கள் துரத்திச் சென்றனர். அந்தக் குழுவில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment