கேலிக் கூத்தாக மாறியுள்ளது ஸ்ரீ ல.சு.க. – திலும் அமுனுகம

225 0

நாட்டிலுள்ள பிரதான கட்சிகளுள் ஒன்றான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைமை இன்று கேலிக் கூத்தாக மாறியுள்ளதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஒரே கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்திலும் மற்றும் சிலர் எதிர்க் கட்சியிலும் இருக்கும் நிலைமை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment