16 பேர் குழு புதன்கிழமை கோட்டாவுடன் பேச்சு

221 0

தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை (13) மாலை இடம்பெறவுள்ளதாக சந்திம வீரக்கொடி எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழு இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும், எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment