அதிகாலையில் நாடு முழுவதும் திடீர் சோதனை- பொலிஸ்

323 0

நாடு முழுவதும் இன்று (10) அதிகாலை விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாள உலக குழுக்களின் செயற்பாட்டைத் தடுத்தல் மற்றும் குற்றச் செயல்களை மட்டுப்படுத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 5 மாத காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பல்வேறுபட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

Leave a comment