மஹான் காலமானார்

358 0

victims-69535_960_720‘மஹான்’ என்று அழைக்கப்பட்ட மூத்த தமிழ் செய்தியாளர் கே ஜி மஹாதேவா தமிழ் நாட்டில் வைத்து காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான ‘ஈழநாடு’ செய்தித்தாளின் சிரேஸ்ட செய்தி ஆசிரியரான அவர், மட்டக்களப்பை சேர்ந்தவர்.

முதலில் 1960களில் மலையகத்தில் இருந்து வெளியான ‘செய்தி’ என்ற செய்தித்தாளில் பணியாற்றி, பின்னர் யாழ்ப்பாண ஈழநாடு செய்தித்தாளுடன் இணைந்துக் கொண்டார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையின் தலைவர் கே சி தங்கராஜாவினால் 1958ஆம் ஆண்டு ஈழநாடு செய்தித்தாள் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது, ஈழநாடு செய்தியகமும் எரிக்கப்ப்பட்ட போதும், மஹாதேவாவும் அவரது குழுவினரும் இணைந்து ஈழநாடு செய்தித்தாளை மீண்டும் வெளியிட்டனர்.

ஈழநாட்டில் அவரது ‘இப்படியும் நடக்கிறது’ என்ற பகுதி மிகப்பிரபலம் பெற்றிருந்தது.

இறுதிக்காலத்தில் தமிழகம் திருச்சியில் வாழ்ந்துவந்த அவர், இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் வெளியான தமிழ் செய்திதாள்களில் பங்களிப்பை செய்துவந்தார்.