குவைட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 15 இலட்சம் பெறுமதியான சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

283 0

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (05) அதிகாலை குவைட்டில் இருந்து வந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் 14 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா பெறுமதியான 29,960 சிகரட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, கொலன்னாவ பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment