மன்னாரில் உலக சுற்றாடல் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு!

312 0

மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(5) காலை 10 மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.

மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் இடம் பெற்ற குறித்த விழிர்ப்புணர்வு நிகழ்வில் மன்னார் சர்வோதைய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன், மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த விழிர்ப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு மக்களுக்கு உலக சுற்றாடல் பாதுகாப்பு தினம் தொடர்பில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment