– உயிரிழப்புக்கள் 20 ஆக உயர்வு

293 0

தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 14 குழந்தைகளும், 6 வயதானவர்களும் உள்ளடங்குவதாக, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஜீ.வியேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் 350 க்கும் அதிகமான நோயாளர்கள் தென் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் குறித்த வைரஸ் தொற்று காரணமாக, அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment