மாவீரர் துயிலுமில்லங்கள் புனித இடங்களாக மாற்றப்படவேண்டும்

349 0

SAMSUNG CAMERA PICTURES

மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் நிலையில் அவற்றை புனித இடங்களாகப் பிரகடனப்படுத்தப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒவ்வொரு மாவீரர் துயிலுமில்லங்களிலும் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளை புதைக்கவில்லை, விதைத்துவிட்டுச் சென்றுள்ளோம். எனவே பிள்ளைகளை விதைத்த இடங்களை புனித இடங்களாக மாற்றவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில், முழங்காவில், கிளிநொச்சி, வன்னிவிளாங்குளம் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறிய நிலையில், ஏனைய துயிலுமில்லங்களிலிருக்கும் இராணுவத்தினரும் வெளியேறவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.