ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

335 0

nam_29082012நாளை (செவ்வாய்க்கிழமை) 33ஆவது ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.நாளை மறுநாள் சிறீலங்காவில் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

இந்த அமர்வில் பலவந்தமான அல்லது தன்னிச்சையான காணாமல்போதல்கள் பற்றிய ஐ.நா செயற்குழுவின் அறிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மேற்படி அமர்வின் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலவந்தமாக அல்லது தன்னிச்சையாக காணாமல்போதல் பற்றிய ஐ.நா செயற்குழுவின் இலங்கை பயணம் தொடர்பான அறிக்கையும் ஐநா சபையில் அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் இந்தச் செயற்குழுவின் இலங்கை பயணம் பற்றிய அறிக்கையும் எதிர்வரும் 15ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலவந்தமான அல்லது தன்னிச்சசையான காணமல்போதல்கள் பற்றிய ஐ.நா செயற்குழு கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.