தென் மாகாண பாடசாலைகள் 28ம் திகதி வரை மூடல்

203 0

தென் மாகாணத்தில் உள்ள சில ஆரம்ப பிரிவு பாடசாலைகள் எதிர்வரும் 28ம் திகதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசப்புத்ர கூறியுள்ளார்.

அதன்படி மாத்தறை, முலடியான, தெனியாய, உடுகம, அகுரெஸ்ஸ, தங்காளை, வலஸ்முல்ல மற்றும் காலி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் ஆகியன இவ்வாறு மூடப்பட உள்ளன.

தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்ப பிரிவு பாடசாலைகளே எதிர்வரும் 28ம் திகதி வரை மூடப்பட உள்ளன

Leave a comment