வௌ்ளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

256 0

சீரற்ற காலநிலையால் களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கெகுலலிய பிரதேசத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீன் பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த குறித்த நபரை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெகுலலிய பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment